பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெறி மாறிப் பேசினால் அவர் பேச்சை மறுத்து இன்னொருவர் இகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டு.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற; - பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்
உரைத்தால், உரை பெறுதல் உண்டு.     (பாடல்: 345)

பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெறி மாறிப் பேசினால் அவர் பேச்சை மறுத்து இன்னொருவர் இகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, சான்றோர் நல்லோர் பலர் கூடியிருக்கும் அவையில் யாரையும் குறைகூறிப் பேசவே மாட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com