பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற; - பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்
உரைத்தால், உரை பெறுதல் உண்டு. (பாடல்: 345)
பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெறி மாறிப் பேசினால் அவர் பேச்சை மறுத்து இன்னொருவர் இகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, சான்றோர் நல்லோர் பலர் கூடியிருக்கும் அவையில் யாரையும் குறைகூறிப் பேசவே மாட்டார்.