இஸ்லாமிய ஆட்சியில் கலீபாவிற்கு அடுத்த பெரும் பொறுப்பு பிற பிரதேசங்களை ஆட்சி புரியும் ஆளுநர்களுக்கே உண்டு.
இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆளுநர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிக்கை தர உளவாளிகளை நியமித்தார்கள். உளவாளிகளின் அறிக்கையை ஆய்வு செய்யும் மேலாளர்களையும் அமர்த்தினார். "எகிப்து ஆளுநர் ஹலரத் அயால் இப்னு கனம்(ரலி) அவர்கள் பட்டு துணிகள் அணிகிறார். வாயில் காவலரை நியமித்து இருக்கிறார்' என்ற தகவல் கிடைத்ததும், மேலாளர் ஹழ்ரத் முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) அவர்கள் மூலம் அறிக்கையை உறுதி செய்தார். ஆளுநர் அயால்(ரலி) அவர்களை வரவழைத்து பட்டாடையைக் களையச் செய்து கம்பளியைப் போர்த்திக் கொண்டு ஒரு ஆட்டு மந்தையை மேய்க்குமாறு கட்டளையிட்டார் கலீபா உமர்(ரலி)அவர்கள்.
கூஃபாவில் ஹழ்ரத் இப்னு அபி வக்காஸ் (ரலி) அவர்கள் பலமான கதவுகளை உடைய பெரிய வீடு கட்டியதை அறிந்து, ஆளுநரைக் கண்டித்து மக்கள் எளிதில் அணுகும் வண்ணம் எளிய வீட்டில் வாழ உத்தரவிட்டார் உமர் (ரலி) அவர்கள்.
எகிப்தின் ஜாமியா பள்ளி வாசலில் ஹழ்ரத் அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அமர தனியாக உயர்ந்த மேடை கட்டியதைக் கண்டித்து ஆளுநர் மக்களோடு மக்களாக அமர ஆணையிட்டார் உமர் (ரலி) அவர்கள்.
ஹினானாவின் ஆளுநர் ஹழ்ரத் உத்பா இப்னு அபு சுயான் அவரின் சொந்தப் பணத்தில் வாணிபம் செய்து ஈட்டிய பொருளைப் பொது கருவூலத்தில் சேர்த்தார்.
சிரியா ஆளுநர் ஹழ்ரத் அபு உபைதா(ரலி) வசதிகளைப் பெருக்கி வாழ்வதை அறிந்த உமர் (ரலி) அவர்கள் ஆளுநரின் சம்பளத்தைக் குறைத்தார். ஒவ்வொரு ஆளுநரும் அவர் பதவி ஏற்கும் பொழுது அவரிடம் என்ன இருந்ததோ அதை விட அதிகமாக இருந்தவைகளை பொது நிதியில் சேர்த்தார்.
கலீபா உமர் (ரலி) அவர்கள் தானும் நல்வழி நடந்து தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளையும் அவ்வாறே நடக்கச் செய்து உலகிற்கே ஒரு முன் மாதிரியாக ஆட்சி புரிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.