ராசி மண்டலத்தில் குரு பகவான்!

குரு பார்க்க கோடி நன்மை'' என குரு பகவானின் அருளைப் போற்றி அனைவருமே வழிபடுகின்றனர். குரு பெயர்ச்சியின்போது ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து ஜோதிடம் கூறுகிறது. மயிலாடுதுறை அருகே பூந்தோட்டம்
ராசி மண்டலத்தில் குரு பகவான்!
Updated on
1 min read

குரு பார்க்க கோடி நன்மை'' என குரு பகவானின் அருளைப் போற்றி அனைவருமே வழிபடுகின்றனர். குரு பெயர்ச்சியின்போது ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து ஜோதிடம் கூறுகிறது.

மயிலாடுதுறை அருகே பூந்தோட்டம் என்ற ஊரில் அறம் வளர்த்த நாயகி சமேத அகத்தீசுவரர் திருக்கோயில் உள்ளது. இங்கு கோயிலின் கருவறை தென்புற தேவகோட்டத்தில் குருபகவான் ராசி மண்டலத்திற்கு மேலே அமர்ந்து அருள் வழங்கும் அற்புத வடிவத்தைக் காணலாம். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் காணப்படுவது சிறப்பு. வேறு எங்கும் காணமுடியாத தெய்வத் திருமேனி.குருபெயர்ச்சி நடைபெறும் இத்தருணத்தில் பூந்தோட்டம் அகத்தீசுவரர் கோயில் செல்வோம். ராசி மண்டலத்தின் மீது அமர்ந்து அருள் வழங்கும் குருபகவானை வழிபட்டு நலம் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com