மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பதினெட்டுபட்டியின் அம்மன்!

கோவை, பெரியநாயக்கன்பாளையத்திற்கு மேற்கே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ளது மாரியம்மன் கோயில்.

News image
Updated On :11 ஜூலை 2013, 10:23 am

கோவை, பெரியநாயக்கன்பாளையத்திற்கு மேற்கே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ளது மாரியம்மன் கோயில். பெரியநாயக்கன்பாளையம் உருவாவதற்கு முன்பே அதன் தாய் கிராமமாக இருந்தது இந்தக் கூடலூர். இவ்வூருக்கு மேற்கே பாலமலை அடிவாரத்திலிருந்து பெரிய நாயக்கன்பாளையம் வரை உள்ள பதினெட்டுபட்டி கிராம மக்களும் இக்கோயிலை வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்துள்ளன. கோயிலின் முன் மண்டபமும், கர்ப்பகிரகமும் அற்புதமான சுதைகளுடன் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் தெற்குப் புறம் விநாயகர், ஐயப்பன் ஆலயங்களும், கிழக்கே விஷ்ணு, துர்க்கை ஆலயமும், வடக்கே கல்யாண நவகிரக நாயகர்களின் ஆலயமும், மேற்கே

சுப்பிரமணியர் ஆலயமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஜூலை 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகளும், பல்வேறு கிராம பஜனைக் குழுக்களின் பஜனைகளும் நடக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.