யான் பெற்ற இன்பம் பெறுக

"சிவ சிவ எனும் மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்தால் ஒருநாள் அனைத்தும் கைகூடும்'' என்கிறார் திருமூலர் தம் திருமந்திரத்தில். அவர் இயற்றிய திருமந்திரப் பாடலிது.
Updated on
1 min read

"சிவ சிவ எனும் மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்தால் ஒருநாள் அனைத்தும் கைகூடும்'' என்கிறார் திருமூலர் தம் திருமந்திரத்தில். அவர் இயற்றிய திருமந்திரப் பாடலிது.

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

"இறைவன் திருவருளால் யான் இறைவனது இன்பத்தைப் பெற்றனன். இவ்வின்பத்தினை இந்த மண்ணுலகமும் பெற வேண்டும்பெருமையினைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் உண்மைப் பொருள் இன்னது என எடுத்துக் கூறினால், அதுவே நாவாகிய தசையினைப் பற்றி நின்ற உணர்ச்சி

தரும் மந்திரமாகும். இந்த மந்திரத்தைப் பற்றப் பற்ற இறைவன் திருவடி ஞானம் கிடைக்கப் பெறும். பெரியோர்கள் தாம் அடைந்த இன்பத்தை பிறரும் அடையுமாறு செய்யும் இயல்பினர். ஆகவே, இவ்வையகம் பெறுக'' என்றார். "மகாமந்திரம் என்பது சிவ சிவ எனப்படுதலையே. இதனை நாவால் உள்ளுக்குள் உச்சரிக்க வேண்டும். அதனால் ஊன் பற்றி நின்ற மந்திரம்'' என்றார். அதுவும் இடைவிடாது உச்சரிக்கப்பட வேண்டும் என்றதனாலேயே "பற்றப் பற்றத் தலைப்படும்'' என்றார் திருமூலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com