தினசரி கோயில் விளக்கை ஓர் எலி தூண்டிவிட்டு எரியச் செய்து வந்தது. இதற்காக இறைவன் மகிழ்ந்து புகழ்பெற்ற ஓர் அரசனாகப் பிறக்கச் செய்தார்.
இந்த அரசன் தான் மகாபலி சக்கரவர்தியாய் புகழ் பெற்றார். இந்த பலிசக்ரவர்த்தி மகாவிஷ்ணு பக்தராய் திகழ்ந்ததாலும் பிரகலாதனின் பேரனாக இருந்ததாலும், தான் சீலராக இருந்தாலும் அரக்க வம்சத்தின் கடைசி அரசராக இருந்ததாலும், இறைவன் மகாவிஷ்ணு வாமனராக இவர் முன்தோன்றி மூன்றடி மண் கேட்டு மூன்றாவது அடியை பலிசக்கரவர்த்தியின் தலைமேல் வைத்து அவருக்கு முக்தியளித்து அருளினார்.