

திருமறைக்காட்டில் திருக்கதவம் திறந்தாகிவிட்டது. சம்பந்தப் பெருமானும் நாவுக்கரசு பெருமானும் மக்கள் புடைசூழ நேர்வழி சென்று வழிபட்டார்கள்.
இப்போது திறந்த கதவு. இதனை முறைப்படி மூடி, பின் முறைப்படி திறக்க வேண்டுமல்லவா! அன்றாடம் நேர்வாசல் திறக்கப் பெற்று, வழிபாடுகள் நடந்து, இரவு பூஜைகளுக்குப் பின் திருக்கதவம்
தாளிடப்பட வேண்டும். இந்த முறைமையைச் செய்தாக வேண்டும்.
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தப் பெருமானை நோக்கினார். ""பிள்ளையாரே! கதவு அடைக்கப் பாடுமின்'' என்று விண்ணப்பித்தார்.
அதன்படி, திருஞானசம்பந்தரும் பாடியருள, உடனே திருக்கதவங்கள் திருக்காப்பிட்டுக் கொண்டன.
திருமறைக்காட்டில் திருக்கதவம்அடைக்கப் பாடிய பதிகம்
""சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா
இது நன்கிறை வைத்தருள் செய்க எனக்குன்
கதவம்திருக் காப்புக்கொள்ளுங் கருத் தாலே.''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.