

இறைவன் அருள் இல்லை என்றால், ஒரு சிறிய காரியத்தைச் செய்வதுகூட பெரும் கஷ்டமாகிவிடும்.
- சாணக்கியன்
கலியில் விஷ்ணு நாமாவைச் சொல்லி சித்தி பெறலாம். நீ எந்தக் கர்மாவைவிட்டாலும் ஜபத்தைக் கைவிடாதே.
மற்ற யுகங்களில் தவத்தாலும் யாகத்தாலும் தியானத்தாலும் எந்தப் பலனை அடைந்தார்களோ, அந்தப் பலனை பகவந்நாமாவை ஜபித்து கலியில் பெறலாம்.
எப்படிச் சொன்னாலும் பகவந்நாமா, யார் எப்படி எதைப் போட்டாலும் அக்கினி எரிப்பதுபோல் பாவத்தை அகற்றும்.
சந்நியாசிக்கு முக்கிய தர்மம் சமம் (பொறுமை). வானப்பிரஸ்தனுக்கு நியமம். கிருகஸ்தனுக்கு தானம். பிரம்மசாரிக்கு குரு சேவை.
விஷ்ணுவைப் பூஜிப்பவன் முதலில் தன்னை விஷ்ணுவாக நினைக்க வேண்டும். விஷ்ணு அல்லாதவன் விஷ்ணுவைப் பூஜிக்கலாகாது.
வேதம் உணர்ந்த சான்றோரின் உடலில் சகல தேவர்களும் வசிக்கிறார்கள். ஆதலின் அவர்களை நித்தியம் பூஜிக்காதவர்கள், சபிப்பவர்கள் என்னைச் சார்ந்தவர்களில்லை. அவர்கள் பாவிகள், தண்டிக்கத் தக்கவர்கள் என்று விஷ்ணு கூறுகிறார்.
- சங்கரரின் "விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்'
பயப்பட வேண்டிய இடத்தில் பயப்படாமல் இருப்பது, பயந்தாங்கொள்ளியின் செயலைக் காட்டிலும் வெறுக்கத்தக்கது.
- கூடலூர் கிழார்
நமது இன்ப துன்பங்களுக்கு முக்கிய காரணமாக நமது மனமே இருக்கிறது. அது தூய்மையடைந்து விட்டால் எல்லாமே தூய்மையாகிவிடும்.
- ஜனகர் சுகபிரம்மத்திடம் கூறியது
தனக்குச் சொந்தமில்லாத சொத்து தனதாகும் வரையில்தான் அதைப் பற்றி ஓர் ஏக்கமும், ஓர் இன்பமும், ஒரு துடிதுடிப்பும் இருக்கும்.
- கபீர்தாசர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.