பொன்மொழிகள்!

பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கத்தைக் கண்டு உறவுகொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவுகொள்வது பிழை.    
பொன்மொழிகள்!
Updated on
1 min read

பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கத்தைக் கண்டு உறவுகொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவுகொள்வது பிழை.    
-  தாயுமானவர்

அக்கினி முதலிய தேவர்கள் பிரம்மச்சரியத்தின் உதவியால்தான் மரணத்தை  வென்றார்கள்.
- அதர்வணவேதம்

உன்னைத் தேடி உன் வீட்டிற்கு எவர் வந்தாலும் அவரைப் போகச் சொல்லாதே. இது விரதம்.        
- தைத்திரீய உபநிஷதம்

பிறருக்கு உபகாரம் செய்தவனுக்குப் புண்ணியம் வந்து சேரும். பிறரை துன்புறுத்தியவனுக்குப் பாவம் வந்து சேரும்.    
- மகாபாரதம்

உழைத்துப் பாடுபடுகிறவர்களைக் கண்டால் தெய்வங்களுக்கு மிகவும் பிடிக்கும்.            
-  ரிக் வேதம்

உண்மையே பேசு. தெய்வங்கள் நிச்சயமாக சத்தியத்தைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றன.  அவை சத்தியத்தால்தான் புகழ் பெறுகின்றன. உண்மையை உரைக்கும் வித்துவானும் புகழ் பெறுகிறான்.
-  சதபதப் பிராம்மணம்

எல்லா உயிர்களும் என்னை நண்பனாகக் கருதட்டும். நானும் எல்லா உயிர்களையும் என் நண்பனாகக் கருதுவேனாக!
-  யஜுர்வேதம்

தேரின் உருளை பல திசைகளிலும் சுழன்று செல்வது போன்று, செல்வமும் பலரிடம் போவதும் வருவதுமாக இருக்கிறது. அது என்றும் ஒரே மனிதனிடமோ ஒரே இடத்திலோ நிலைத்திருப்பதில்லை.
- ரிக் வேதம்

சத்தியம் என்ற ஓடம் தர்மாத்மாவைக் கரையேற்றுகிறது.
- யஜுர்வேதம்

அந்நியனோ நம்மவனோ, உற்றார் உறவினனோ, நண்பனோ பகைவனோ இவர்களில் எவராக இருப்பினும் ஆபத்தில் சிக்கியிருந்தால், அவர் துன்பப்படுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் அவர் அதிலிருந்து விடுவிக்க முற்படுவதே தயை அல்லது கருணை எனப்படும்.
- அத்ரி ஸ்மிருதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com