பொன்மொழிகள்!

சம்சாரம் எனப்படும் தோற்ற உலகம் மதிமயக்கத்தின் விளைவு. அது பாரமார்த்திக உண்மையன்று.
பொன்மொழிகள்!
Updated on
1 min read

சம்சாரம் எனப்படும் தோற்ற உலகம் மதிமயக்கத்தின் விளைவு. அது பாரமார்த்திக உண்மையன்று.

- ஆதிசங்கரர்


தவளை குதித்துச் செல்வதால் உண்டாகும் நீர் அசைவினால், பெரிய யானையின் நிழலைக் காண்பதும் அரிதாக இருக்கும். அதுபோல் பகை சிறியதாக இருந்தாலும், அதனால் உண்டாகும் விளைவு பெரியதாக இருக்கக்கூடும்.

- குமரகுருபரர்


எந்த மனிதனும் தர்மத்தை மட்டுமோ, பாவத்தை மட்டுமோ செய்துகொண்டிருக்க முடியாது.

-  மகாபாரதம்

செல்வம் உடையவன் அதைத் தனித்து அனுபவித்தால், அதை அவன் இழந்தவன் என்றே கருத வேண்டும். 

-  புத்தர்


ஒளிவடிவமான சூரியனிடம் எப்படி இருள் இல்லையோ, அப்படியே அறிவு வடிவமான ஆத்மாவில் அஞ்ஞானத்திற்கு இடமில்லை.

- ஆதிசங்கரர்


உலகம் தரும் இன்ப துன்பங்களுக்கிடையில் இறைவா, உன்மீது நான் கொண்டிருக்கும் பக்தியை என்றும் மாற்றாமல் வைத்திருப்பேனாக.  

- பட்டினத்தார்


யானை உண்ணும் கவளத்தில் ஒரு சிறு பகுதி கிடைத்தால்கூட, அது பல்லாயிரம் எறும்புகளுக்கு உணவாகும். அதுபோல் பணக்காரர்கள் வீணாகச் செலவிடும் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டுகூட, ஏழைகள் பலர் நன்றாக வாழ முடியும்.

- குமரகுருபரர்


சென்றது இனி மீளாது மூடரே, எப்போதும் சென்றதையே சிந்தனை செய்து மாளாதீர்.

- பாரதியார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com