

அளவுக்கும் அதிகமாக உணவு உட்கொள்ளுதல், அளவுக்கும் அதிகமாக பருகுதல், தீயவர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய பாவங்கள் நீக்கப்பட வேண்டும்.
-அகமர்ஷண சூக்தம்
பரம்பொருள்தான் காரணமும், காரியமும் ஆக இருக்கிறது. அந்தப் பரம்பொருளைத் தரிசித்தபிறகு, இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன; சந்தேகங்கள் எல்லாம் நீங்கிவிடுகின்றன; எல்லாவிதமான வினைப்பயன்களும் அழிகின்றன.
-முண்டக உபநிஷதம் 2.2.8
ஒருவன் தனக்கு உரிய கர்மங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே போதும்; அவன் மேன்மையடைந்துவிடுவான்.
- கருட புராணம்
கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் காணிக்கை தருதல், வேள்வி செய்தல், தவம் மேற்கொள்ளுதல், சாஸ்திரங்களைக் கற்றறிதல் ஆகிய நான்கையும் பாதுகாத்து வளர்க்க வேண்டிய கடமையாகக் கொள்ள வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால், எந்த இடத்திலும் இவற்றால் உண்டாகும் பயன் கிடைக்காமல் பாழ்படும்.
-ஆச்சாரக்கோவை
இறைவனின் பெருமை பற்றிய ஞானத்துடன் கூடியதும், மற்ற எதனிடமும் காட்டப்படாமல் இறைவனிடம் மட்டும் காட்டப்படுவதுமான விசேஷ அன்பே பக்தி எனப்படும். இத்தகைய பக்தியால்தான் முக்தி கிடைக்குமே தவிர, வேறு வழியில் முக்தி கிடைக்காது.
-மத்வாச்சாரியார் (துவைதம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.