பொன்மொழிகள்!

அறநெறிகளை அறிந்துகொள்ளுங்கள்! வாழ்க்கை நிலையாமையை அறிந்து காலனுக்குப் பயப்படுங்கள்! பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள்!
பொன்மொழிகள்!
Updated on
1 min read

அறநெறிகளை அறிந்துகொள்ளுங்கள்! வாழ்க்கை நிலையாமையை அறிந்து காலனுக்குப் பயப்படுங்கள்! பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள்! நற்குணங்களை நன்கு வளர்த்துக்கொள்ளுங்கள்! கபடத்தன்மையை வெறுத்து ஒதுக்குங்கள்! தீயசெயல்களைச் செய்யும் தீயவர் நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! தினமும் நல்லோர் கூறும் அறவுரைகளைக் கேட்டுத் தெளியுங்கள்!

-நாலடியார்

நல்ல தலைவர் எத்தகைய கொடிய சொற்களைக் கூறினாலும், முடிவில் அது நன்மையைத் தருவதால் இனிய சொல்லாகும். தீயவரின் இனிமையான சொல்லும் பின்னால் தீமை விளைவிப்பதால் அது நஞ்சே ஆகும்.

தீயைப் போன்று சுடுகின்ற வெங்காரம் என்ற ஒரு மருந்து கொடியதாகக் காணப்பட்டாலும், அது நோயைப் போக்கி உடல் நலத்தைத் தரும். சில விஷங்கள் உட்கொண்டவுடன் உடல் சிலிர்க்குமாறு குளிர்ச்சியைத் தரும் என்றாலும் பின்பு மனிதனைக் கொன்றுவிடும்.

-நீதிநெறி விளக்கம்

கபடத்தின் மூலமாகவும், கெட்ட உபாயங்கள் மூலமாகவும் கைகூடுகிற காரியங்களில் மனதைச் செலுத்தக் கூடாது.

-விதுரநீதி

உண்மையில் "உலகபந்தம்' என்ற ஒரு கட்டு இல்லை. என்றாலும் ஐம்புலன்கள் உலக இன்பங்களை நுகர விரும்பும்போது, பந்தம் தீவிரமாகி இறுக்கமாகப் பிணைத்துக் கட்டுகிறது. உலக ஆசைகள் குறையக் குறைய, உலகபந்தம் என்ற கட்டும் மெல்ல மெல்ல அவிழ்ந்து போகிறது.  

-யோகவாஷிட்ட சாரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com