அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பொன்மொழிகள்!

சித்தத்தின் மீது வெற்றி கொள்வதற்கு உறுதியான உபாயங்கள் நான்கு இருக்கின்றன.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:17 pm IST


சித்தத்தின் மீது வெற்றி கொள்வதற்கு உறுதியான உபாயங்கள் நான்கு இருக்கின்றன. அவை 1. ஆன்மிக தத்துவ நூல்களை ஓதுவது, 2. நல்லோர் பெரியோர்களின் சத்சங்கம், 3.வாசனைகளை (சம்ஸ்காரங்களை) ஒழித்தல், 4. பிராணாயாமம் செய்தல் ஆகியவையாகும்.
-யோகவாசிஷ்டம்

இறந்த பிறகு புண்ணியவான்கள் ஒளி உலகத்திற்கும், பாவிகள் இருள் உலகத்திற்கும் செல்வார்கள்.
-ஸ்ரீ அருணகிரிநாதர்

நம்மிடம் அருள் என்னும் மேலான உணர்வு இருக்க வேண்டும். அது இல்லாதபோது உள்ளத்தில் அறிவு சுடர் விடாது. நாம் அந்த அருளுணர்வின் மூலம்தான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் வெல்ல முடியும்.
- ஒளவையார்

பாழாய்ப்போன இந்த உலக மாயையை விட்டு மனம் தனித்து நிற்பது எப்பொழுது? மனமானது செம்மையாகத் திகழ்வதுதான் எப்பொழுது?
-சட்டைமுனி சித்தர்

வாழ்க்கையை ஒரு கர்ம யோகமாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அந்த ஆன்மிக முயற்சி ஒருபோதும் வீண்போகாது. அந்த முயற்சியில் குற்றம் கிடையாது. சிறிதளவு முயற்சிகூட பெரும் பயத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றுகிறது.
-பகவத்கீதை 2.40

பிரம்மத்தைத் தவிர குரு வேறானவர் அல்லர். இது இரண்டு முறையும் சத்தியம்.
-குரு கீதை 1.10

உலகமே ஆத்மாவால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் ஆதாரம். பேருணர்வுப் பொருளான அந்த ஆத்மாவே இறைவன்.
-ஐதரேய உபநிஷதம் 3.3

"இந்த உலகத்தைப் படைத்த இறைவன் ஒருவனே' என்பதை அறிந்து அவனை வணங்க வேண்டும். எந்த விதமான தீய செயல்களையும் செய்யாமல் உத்தமனாக இந்தப் பூமியில் வாழ வேண்டும்.
-கும்பமுனி (அகத்தியர்) சித்தர்

பாத்திரத்தில் ஒரு சிறிய துவாரமிருந்தாலும், அதிலிருந்து எல்லா நீரும் வெளியேறி விடுகிறது. இதுபோலவே ஆத்ம சாதகனின் மனதில் தீய ஆசைகள் ஏற்பட்டால், சாதனையின் பயன் மறைந்துவிடுகிறது.
-மகான்களுடைய சீரிய உபதேசம்

உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை "அறிவாளிகள்' என்றும், "பண்டிதர்கள்' என்றும் கருதுகிறார்கள். அவர்கள் மூப்பு, மரணம் ஆகியவற்றின் வசப்பட்டு உழல்கிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடர்களைப்போல், இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச்சூழலில் உழல்கிறார்கள்.
-முண்டக உபநிஷதம் 1.1.8

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.