மணியோசை

மணியோசை

"பொருநை போற்றுதும்" தொடரில் இயந்திரங்களைச் சேதப்படுத்தாமல் ஊழியர்களின் வேலை நிறுத்தம் மூலம் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்த சுப்பிரமணிய சிவாவின் எழுச்சிமிக்க உரையும், அதன் தாக்கமும் அறிந்து மகிழ்ந்தேன். டாக்டர் சுதா சேஷய்யனுக்கு நன்றி..!
-என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

பெரியபாளையம் பவானி அம்மனின் வரலாற்றை இதற்கு முன்பு படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் பொழுது புதுமையாகத் திகழ்ந்தது. ஜி.ஏ.பிரபாவின் "தேவியின் திருத்தலங்கள்' தொடர் அருமையான பதிவு. படித்துப் பாதுகாத்து வருகிறேன்..!
-எஸ்.கிருஷ்ணசாமி, ஆவடி.

"63 நாயன்மார்களில் ஒருவர்தான் சண்டிகேஸ்வரர்' என்பதை அறிய வைத்தது "காசியாத்திரை பலனை முழுமையாகப் பெற...' கட்டுரை. அவருக்கு ஏன் ஈஸ்வரர் என்ற பட்டம் கிடைத்தது என்பதை சிவ புராணத்தின் மூலம் அறிய வைத்த கட்டுரையாளர் மாலதி சந்திரசேகரனுக்கு பாராட்டுகள்..!
-ந. சண்முகம், திருவண்ணாமலை. 

பா. சுஜித்குமார் எழுதிய "எழுந்திரு பறவையே!' கட்டுரை வாசித்தேன். ராமாயணத்தில் ராவணன் ஜடாயுவை வென்றதும், ராமன் "லே பாக்ஷி' என்று குறிப்பிட்டு உயிர் பெறச் செய்ததும், அதற்காக அங்கு கருடனின் மிகப் பெரிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ள செய்தியும் அற்புதம்..!
-கூத்தப்பாடி பழனி, பென்னாகரம்.

ரஞ்சனா பாலசுப்பிரமணியன் எழுதிய "பஞ்ச பூத சக்தி' கட்டுரை மூலம் சாக்த வழிபாடு குறித்தும், முக்கியமான நான்கு நவராத்திரிகள் பற்றியும் அறிந்தது மிகவும் பயனாக இருந்தது. 
-செந்தி மாரீஸ்வரி, தேனி.

பொ.ஜெயச்சந்திரன் எழுதிய கட்டுரை மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்னம்பள்ளி கிராமத்திலுள்ள "பசு கண்டெடுத்த பெருமாள் கோயில்' பற்றி பலர் அறியச் செய்தது பாராட்டத்தக்கது.
-லேகா விஷ்ணு, சிறுகளத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com