கும்பாபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டம் (செஞ்சி) பானம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கைலாசநாதர், சோளீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி உடனுறை அபயப்ரத வரதராஜ கோயில் கும்பாபிஷேகம் செப். 9}ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
ஆராதனை
கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் மகானின் 330}ஆவது ஆராதனை மஹோத்ஸவம் செப். 10 முதல் 23}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நாள்கள்: செப். 10} பௌர்ணமி திதி ஆராதனை, 19} அகண்டதாரா பஜனை, 22} குருநாதாள் மகா ஆராதனை, 23} ஆஞ்சநேய உத்ஸவம், விடையாற்றி உத்ஸவம். உத்ஸவ நாள்களில் காலையில் ஸ்ரீமத் ராமாயண மூல பாராயணமும், மாலை ராமாயண உபன்யாசமும் நடைபெறும்.
நாமகுரு ஆராதனை
சென்னை மேற்கு மாம்பலம் விநாயகம் தெருவில் உள்ள ஸ்ரீராம மந்திரம் } ஸ்ரீராம நாம வங்கி வளாகத்தில் ஸ்ரீபகவன் நாம போதேந்திராருக்கு நாமத்தால் ஆராதனை செப். 10 முதல் 23}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் நாம பாராயாணம், புஷ்பாஞ்சலி, மலர் வெளியீடு, அன்னதான கைங்கர்யம் ஆகியன நடைபெறும்.
தொடர்புக்கு} 8754 000600, 044}2489 3786.
அகண்டநாம ஸங்கீர்த்தனம்
அரக்கோணம் காவனூர் சாலை அருகே அருணாச்சலம் ரெட்டி தெருவில் உள்ள ஸ்ரீநந்தீஸ்வரர் கோயிலில், திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி சார்பில் 2}ஆம் ஆண்டு அகண்டநாம ஸங்கீர்த்தனம் செப். 18 (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 9 மணி வரை நடைபெறுகிறது. பூஜை விவரம்: காலை 5} அகண்ட தீபம் ஏற்றுதல், 5.30} வேள்வி தொடக்கம், 6 மணி} கோ பூஜை தொடக்கம், 7 மணி} மஹா மந்த்ர பாராயண தொடக்கம், செப் 19 காலை 7} மஹா மந்த்ர பாராயணம், லோக úக்ஷம அகண்ட வேள்வி பூர்ணாஹுதி, 7.15} ப்ருந்தாவன வஸந்தோத்ஸவம்.
தொடர்புக்கு- 9381221119.