தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

2022-ம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் முதல் 4 ராசிகளுக்கான பலன்களை கணித்து வழங்கியுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

2022-ம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் முதல் 4 ராசிகளுக்கான பலன்களை கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த சுபகிருது ஆண்டின் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலின் மூலம் நல்ல லாபமும், புதிய தொழிலில் ஈடுபட வாய்ப்பும் ஏற்படும். 

குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும். பண வரவு சீராகவே தொடரும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். பழைய கடன்களையும் வசூலித்து விடுவீர்கள். முகத்தில் பொலிவும், தேகத்தில் மிடுக்கும் கூடும். பொது காரியங்களில் மகிழ்ச்சி யுடன் ஈடுபடுவீர்கள். 

புனிதத் திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று வருவீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்து சேரும்.  நேர்முக மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாத காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபட வாய்ப்புகளும் அதனால் புகழ், கெüரவம் ஆகியவைகளும் கூடும். மனதில் இருந்து வந்த அச்சம், பயம், சலனங்கள் விலகி தெளிவு உண்டாகும். 

செய்தொழிலில் இருந்த போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். நண்பர்களும் உற்றார் உறவினர்களும் தேடி வந்து உதவி செய்வார்கள். சிலர் வசிக்கும் வீட்டை புதுப்பிப்பார்கள். சிறிய தூரப் பயணங்களையும் செய்ய நேரிடும். திருமணமாகாதவர்களுக்கு, திருமணமும், குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.  குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தோருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அனுகூலமான காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்கள் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய ஊழியர்களை நம்பி மனதிலுள்ளதை  வெளிப்படையாகப் பேசாதீர்கள். வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகளு க்காக முயற்சி எடுப்பீர்கள். வெற்றி நிச்சயம். வியாபாரிகள் எளிதில் முடிந்துவிடும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்குப் பின்னரே சாதகமாகும். கூட்டாளிகளிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். இழுபறியாக இருந்து வந்த நீண்ட நாள் வசூல் தொடர்பானவைகளுக்குத் தக்க தீர்வு ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமடைவீர்கள். 

விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். கூலித் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விவசாய உபகரணங்களை பழுது நீக்கி சீர் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். திட்டமிட்ட காரியம் ஆற்றுவதில் தைரியத்துடன் கட்சித் தொண்டர்களைக் கொண்டு முடிப்பீர்கள். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பெண்மணிகள் அனைவருடனும் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும், பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். செலவுகளையும் தவிர்த்துப் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். முயற்சிகளை அதிகரித்து முன்னேறுவீர்கள். 

மாணவமணிகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த சில முயற்சிகளைச் செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்:- துர்க்கை வழிபாடு உகந்தது.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த சுபகிருது வருடத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் புதியவர்கள் உங்கள் செய்தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.  முன்யோசனை இல்லாமல் காரியங்களைச் செய்யத் தொடங்கினாலும், சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். 

மனதில் தைரியமும், எதையும் சாதிக்கும் திறமையும் மேலோங்கும். உடலில் இருந்த நோய் நொடிகள் அகன்று மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்புமுனைகள் உண்டாகும். பணம் தேவைக்கு மேல் சரளமாக வரத் தொடங்கும். அதே நேரம் அனாவசியப் பயணங்களைத் தள்ளிப்போடவும், சிறிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனத்துடனும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். 

ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் விசுவாசமாக இருப்பார்கள்.  குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்கும். மனதில் தெளிவுடன் சுறுசுறுப்பாக நடந்து கொள்வீர்கள். இதுவரை விற்க முடியாத அசையாச் சொத்துகளை நல்ல விலைக்கு விற்று லாபமீட்டுவீர்கள். பழைய கடன்களை குறிப்பாக வங்கிக் கடன்களை முழுவதுமாக அடைத்துவிடுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை புரிந்துகொண்டு மாற்றி யோசித்து வெற்றி பெற்று விடுவீர்கள். 

மேலும் மனதிற்கினிய பயணங்களையும் செய்வீர்கள். குழந்தைகளையும் வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் ஒரு புதுவித மாற்றம் அதன் வழியில் நல்ல செல்வம் செல்வாக்கு பெருவதற்குரிய காலகட்டமாக இது அமைகிறது.

உத்யோகஸ்தர்களில் அரசுப் பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். பயணத்தின்போதும், இயந்திரங்களில் வேலை செய்யும்போதும் சற்று கூடுதல் பாதுகாப்புடன் செயல்படவும். சுபச் செலவுகள் கூடினாலும், பொருளாதாரதம் மேன்மை அடைவதால் சமாளிப்பீர்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும்.  

வியாபாரிகளுக்கு எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். சுயதொழில் விருத்தி அடையும். வாழ்க்கை வசதிகளையும், வியாபாரத்தையும் விரிவுபடுத்தி மேன்மை அடைவீர்கள்.  விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் கூலித் தொழிலாளர்களிடம் நடந்து கொள்ளவும். பேச்சிலும், செயலிலும் வேகத்தை குறைத்துக் கொள்வீர்கள். இதனால் விசேஷமான நன்மைகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் ஈடேறும்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தங்கள் கொள்கைகளை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவார்கள். அரசாங்கத்தால் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது ஈடேறும்.  
கலைத்துறையினருக்கு மதிப்பும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் பெருகும். தொழிலில் ஏறுமுகமாகவே இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பொருளாதாரம் ஏற்றம் தரும். சுப காரியங்கள் கைகூடும். 

பெண்மணிகள் தங்களை வெறுத்து ஒதுக்கிய உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக மாறுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். குடும்ப நலம் சிறக்கும். உங்களைக் காட்டிலும் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். 

மாணவமணிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். சக மாணவர்களுக்காக நிறைய செலவுகளைச் செய்வீர்கள். இந்த ஆண்டில் எண்ணியது எண்ணியபடியே நிறைவேறும் கிட்டும். 

பரிகாரம்:- ஏழுமலையானை வழிபடவும்

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த சுபகிருது வருடத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உடல், மன உபாதைகள் மறைந்து தெளிவுடனும், சுறுசுறுப்புடனும் பணியாற்றத் தொடங்குவீர்கள். புதிய இடங்களுக்கும் செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடும். 

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரும்.  குழந்தைகளும் உங்கள் சொல்லுக்கு செவிசாய்ப்பார்கள். புதிய தொழில் நுட்பங்களையும் கற்றுக்கொள்வீர்கள். உடன் பிறந்தோர் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வார்கள். போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டா வது காப்பாற்றி விடுவீர்கள். 

பழைய காலத்தில் தொலைந்துபோன பொருள்கள் அதிர்ஷ்டவசமாக திரும்ப கைவந்து சேரும். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு தவிர்க்க முடியாத சில நிர்பந்தங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும்.  இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம்  வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்பினால் சில புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். 

 நெடுநாளாக வராமல் இருந்த உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அசையாச் சொத்துகள் விஷயத்தில் இருந்த வில்லங்கள் நீங்கி வருமானம் வரத் தொடங்கும். உடல் ஆரோக்கியமும் மனவளமும் உயர்வாகவே இருக்கும். யோகா, தியானம், பிராணாயாமம் போன்றவைகளையும் கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிணக்குகள் யாவும் மறைந்து இணக்கமான சூழ்நிலை உண்டாகும். 

அரசாங்க ஊழியர்கள் உங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பார்கள். சிலர் புதிய வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். சிலருக்கு வசிக்கும் வீட்டைப் புதுப்பிக்கும் யோகமும் உண்டாகும். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வழக்குகளிலும் எதிர்பார்த்த அனுகூலமான திருப்பங்கள் கிடைக்கும். சுணங்கி வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மழலை பாக்கியமும் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இது அமைகிறது.

உத்யோகஸ்தர்கள் உயர் பதவிகளில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதை உறுத்திய சில பிரச்னைகள் மறையும். சக ஊழியர்களிடையே ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரிகள் நுணுக்கமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். லாபகரமான வாய்ப்புகள் வியாபார பணிகளில் அமையும். விவசாயிகளுக்கு நெருக்கமானவர்களின் மூலம் சில அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென்று முடியும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கலைத்துறையினர் எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவு கிடைக்கும். பழைய கலைஞர்களின் சந்திப்பு மனதிற்கு 
சந்தோஷத்தை ஏற்படுத்தும். 

பெண்மணிகளுக்கு உடலாரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். புதிய பொருள்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு சக மாணாக்கர்களிடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் தீர்ந்துவிடும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிப்பைத் தொடரும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் 
உண்டாகும்.

பரிகாரம்:- சனிபகவானை வழிபட்டு வரவும்.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த சுபகிருது வருஷம் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகத் தொடங்கும். குடும்பத்தில் தன்னிறைவைக் காண்பீர்கள். உங்கள் நிர்வாகத் திறமை கூடும். அரசியல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல ஆதாயங்களும் அனுகூலங்களும் உண்டாகும். தன் வசமுள்ள விலை உயர்ந்த பொருள்களை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு புதிய அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். 

உடன் பிறந்தோருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். கடந்தகாலத்தில் உங்களின் உழைப்புக்கு கிடைக்காத மதிப்பும் மரியாதையும் கிடைக்கத் தொடங்கும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து அதனால் பெருமையடைவீர்கள். அனைவரிடமும் முகமலர்ச்சியோடு பேசிப் பழகுவீர்கள். உங்களை குறை கூறி வந்த நண்பர்கள் உங்களின் புகழ்பாடுவார்கள். 

இந்த ஐப்பசி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் துரித முன்னேற்றம் உண்டாகு ம். சுயமதிப்பும், வெளியிடத்து வரவேற்பும் அமோகமாக இருக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத உதவிகளும், பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தாருடன் புனித திருத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தெய்வ வழிபாட்டிலும், ஆன்மிகத்திலும் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் காலடி எடுத்து வைப்பீர்கள். 

பொருளாதாரம் மேன்மையாக அமையும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். உடன்பிறந்தோருக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுபட்டு விடுவீர்கள். அதே நேரம் எவருக்கும் அநாவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம். உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ அல்லது முன் ஜாமீன் போடுவதோ கூடாது. தாமதமாகி வந்து கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்களும், குழந்தை பிறப்பும் இந்த காலகட்டத்தில் நடந்தேறும்.

உத்யோகஸ்தர்களுக்கு உத்யோக பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைப்பததற்கு வாய்ப்பு வரும். உங்களது திறமைகளை மேலிடம் பாராட்டும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில்  சறுக்கல்கள் இருந்தாலும் உயர்வு காண்பீர்கள். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் காண்பீர்கள். போட்டிகள் குறையும். விவசாயிகள் மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். அனுபவ அறிவினால் விவசாயத்தைப் பெருக்குவீர்கள். சிந்தித்து செயல்படுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கட்சி மேலிடத்தி ன்  கெடுபிடி அதிகரிக்கும். அந்தஸ்தில் சிறிய குறைபாடுகள் உண்டாகுமானாலும் கவனமாகச் செயல்பட்டு நீக்கிவிடுவீர்கள். கலைத்துறையினர் எடுத்த காரியத்தை பின்வாங்காமல் தொடர்ந்து முயற்சித்து வென்று விடுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். நல்ல திறமையான கதாபாத்திரங்கள் தேடிவரும். சக கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் உங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளைச் செய்வீர்கள். 

பெண்மணிகள் கணவரின் பாராட்டுதல்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். புத்தாடை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகச் சுற்றுலா தலங்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். 

மாணவமணிகள் பல திறமையான போட்டகளில் பங்கேற்று வெற்றியும் பெறுவீர்கள். எதிர்பாராத பல உதவிகள் கிட்டும்.

பரிகாரம்:- விநாயகப் பெருமானை வழிபடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com