ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அழகு என்ற சொல்லுக்கு...

தர்மராஜன்கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோயில்..

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 11:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாடிப்பட்டியைச் சேர்ந்த துறவி சொக்கையா பண்டார சுவாமிகள், தனது குருவான கும்பகோணம் ஸ்ரீ மௌனசாமியின் வழியில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தினார். இவர் பல்வேறு ஊர்களில் திருமடங்களையும் கட்டினார். இவர்தான் தவம் செய்து வாழ்ந்த தர்மராஜன்கோட்டையில் உள்ள குன்றில் பாலதண்டாயுதபாணி கோயிலை பக்தர்கள் எளிமையாக ஏறி தரிசிக்கும் வகையில் 1921}ஆம் ஆண்டில் சிறப்புடன் கட்டினார்.

மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி சிலை அழகின் மொத்த அம்சம். கோயிலின் வரவேற்பு வளைவை அடுத்துள்ள தெப்பக்குளத்தைக் கடந்து விநாயகரை தரிசித்தப்படி கீழிருந்து கோயில் அமைப்பை பார்ப்பது பிரமாண்டமாகத் தெரியும். கோயில் சுவரில் சுதையினாலான மயில்கள் அமைந்துள்ளன . சொக்கையா பண்டார சுவாமிகளுக்கு முருகனுக்கு வலதுபுறமாக குன்றின் கீழே தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

குன்றின் கீழே இடதுபுறம் பாலகணபதி அருள்பாலிக்கிறார். குன்றின் மேலே தண்டாயுதபாணி சந்நிதியின் சுற்றுப்பிரகாரத்தில் நவக் கிரக சந்நிதி அமைந்துள்ளது. குன்றின் மீது நாகர் சிலை உள்ளது.

"செவ்வாய்க்கிழமையில் இத்தலத்தில் நெய் தீபம் ஏற்றி வைத்து, மனமுருகி வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதம் செய்தால் குழந்தை வரம் கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, தொழில் விரிவு அடைந்திட வேண்டுபவர்களுக்கு வழிபட உகந்தது' என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கோயில் வளாகத்தில் இருக்கும் மரக் குச்சிகளை எடுத்து சுப நிகழ்ச்சிகளில் வைத்து வழிபடுகின்றனர். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் நட்சத்திர நாளன்று முருகனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

இத்தலத்தில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தேர்த் திருவிழா, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, பால் குடம், மயில் காவடி, அலகு குத்துதல், தேர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிவிமரிசையாக நடைபெறும் .

வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் , திண்டுக்கல் } மதுரை நெடுஞ்சாலையில் இந்தத் தலம் அமைந்துள்ளது.

- சோழவந்தான் ஜெனகராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.