பெஷா வர், டிச.5: பாகிஸ் தா னின் வட மேற்கு எல்லை மாகாண தலை ந கர் பெஷா வ ரில் இரு இடங் க ளில் சனிக் கி ழமை தலி பான் கள் நடத் திய தாக் குத லில் 9 பேர் உயி ரி ழந் த னர், 27 பேர் காய ம டைந் த னர்.
பழங் கு டி யி னர் வாழும் முக மந்த் ஏஜென்ஸி பகுதி மற் றும் பல் க லைக் க ழக சாலைப் பகு தி யில் முறையே கண் ணி வெடி மற் றும் கார் குண் டு களை வெடிக் கச் செய்து தாக் கு தல் நடத் தப் பட் டுள் ளது.
இது கு றித்த விவ ரம் பின் வ ரு மாறு:
முக மந்த் ஏஜென்ஸி பகு தி யில் உள்ள பைஸôய் என்ற இடத்தி லி ருந்து பெஷா வ ருக்கு பய ணி க ளு டன் சென்ற பஸ் கோஷா சினரி என்ற இடத் திற்கு அருகே வந் த போது அந்த இடத் தில் புதைத்து வைக் கப் பட் டி ருந்த கண் ணி வெடி மீது ஏறி ய போது கண் ணி வெடி வெடித் தது.
இதில் பஸ் டிரை வர் உள் பட 6 பேர் கொல் லப் பட் ட னர். குழந் தை கள், பெண் கள் உள் பட 13 பேர் காய ம டைந் த னர். காய ம டைந் த வர் கள் மருத் து வ ம னை க ளில் அனு ம திக் கப் பட் டுள் ள னர். இவர் க ளில் 4 பேர் நிலைமை கவ லைக் கி ட மாக உள் ளது.
பஸ் ஸில் இருந்த அனை வ ரும் பெஷா வ ரில் நடை பெ றும் திரு ம ணம் ஒன் றில் கலந் து கொள் ளச் சென் ற வர் கள். இத் தாக் கு த லுக் கான கார ணம் உட ன டி யா கத் தெரி ய வில்லை என்று அங் கி ருந்து வரும் தக வல் கள் தெரி விக் கின் றன.
வணி கப் ப கு தி யில் கார் குண்டு வெடிப்பு: பெஷா வ ரில் பல் க லைக் க ழக சாலை யில் அமைந் துள்ள வணி க வ ளாக கட் ட டத் தின் முன் நிறுத் தி வைக் கப் பட்ட காரில் வைக் கப் பட் டி ருந்த குண் டு வெ டித் தது.
இப் ப கு தி யில் உள்ள 3 மாடி கொண்ட கட் ட டத் தில் கடை க ளும், தனி யார் அலு வ ல கங் க ளும் செயல் பட்டு வந் தன. இந்த பகுதி மக் கள் நட மாட் டம் அதி க மாக இருக் கும் இட மா கும்.
இந் தக் கட் ட டத் தின் முன் பாக நீண் ட நே ர மாக நிறுத் தி வைக் கப் பட்டு இருந்த காரில் இருந்த குண் டு வெ டித் தது.
இதில் 3 பேர் உயி ரி ழந் த னர், 14 பேர் காய ம டைந் த னர். காய ம டைந் த வர் கள் மருத் து வ ம னை க ளில் அனு ம திக் கப் பட் டுள் ள னர்.
கார் குண்டு வெடித் த வு டன் அதன் அரு கில் நிறுத் தி வைக் கப் பட்ட கார் க ளில் தீ பர வி யது. 3 மாடிக் கட் ட டத் தி லும் தீ பரவ ஆரம் பித் தது. ரசா ய னப் பொ ருள் கள் விற் கும் கடை யில் தீப் பி டித் த தால் அங்கு வைக் கப் பட் டி ருந்த ரசா ய னப் பொ ருள் க ளும் தீப் பி டித்து எரிய ஆரம் பித் த தால் கட் ட டத் தில் வேக மாக தீ பர வி யது. கட் ட டத் தின் ஒரு ப குதி முற் றி லும் சேத ம டைந் தது. இதற் கி டை யில் அப் ப கு தி யில் வசிக் கும் மக் கள் ஏணி கள், கயி று கள் மூலம் அக் கட் ட டத் தின் மேல் தளங் க ளில் மாட் டிக் கொண் ட வர் களை மீட் ப தற்கு உத வி னர். சம் பவ இடத் திற்கு விரைந் து வந்த மீட் புக் கு ழு வி னர் 2 உடல் களை மீட் ட னர், தீய ணைப் புப் படை யி னர் நீண் ட நே ரம் போராடி தீயை அணைத் த னர் என்று மாவட்ட நிர் வாக தலை வர் ஷாகிப் ஸதா அனீஸ் தெரி வித் தார்.
பெஷா வ ரில் உள்ள ஜாமியா மசூ தி யில் வெள் ளிக் கி ழமை நடத் தப் பட்ட தற் கொ லைப் ப டைத் தாக் குத லில் 40 பேரும், முக மந்த் ஏஜென்ஸி பகு தி யில் நடத் தப் பட்ட குண் டு வெ டிப் பில் 6 பேரும் கொல் லப் பட் ட னர் என் பது குறிப் பி டத் தக் கது.
தெற்கு வஜி ரிஸ் தான் பகு தி யில் தலி பான் க ளுக் கெ தி ராக ராணு வம் தாக் கு தல் நடத் தி வ ரு கி றது. இத் தாக் குத லில் நூற் றுக் கும் மேற் பட்ட தலி பான் கள் கொல் லப் பட் டுள் ள னர்.
இதற்கு பழி வாங் கும் நட வ டிக் கை யாக தலி பான் கள் கடந்த சில வா ரங் க ளாக பெஷா வர் நக ரின் பல் வேறு இடங் க ளில் தொடர்ந்து தாக் கு தல் நடத்தி பாது காப் புப் படை யைச் சேர்ந் த வர் க ளை யும், அப் பாவி மக் க ளை யும் கொன் று வ ரு கின் ற னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.