தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பிரான்ஸ் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது.
கடந்த 13 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதற்கு பதிலடியாக பிரான்ஸ் போர் விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகமாக கருதப்படும், சிரியாவில் உள்ள ரக்கா நகர் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தின.
கமாண்டன்ட் அலுவலகம், ஆள்சேர்ப்பு மையம், வெடிபொருள் கிட்டங்கி, பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் இத்தாக்குதல் நடைபெற்றது.
பத்து ஜெட் போர் விமானங்கள் உள்பட 12 விமானங்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக, பிரான்ஸ் பாதுகாப்பு துறை ஊடக தொடர்பாளர் மைக்கேல் சோரியா கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் நகரிலிருந்து புறப்பட்ட பிரான்ஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்க படைகளும் உதவி செய்தன.
இத்தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் ஏதும் உடனடியாக தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

