வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: 1503 ஆண்டுகள் சிறை தண்டனை! 

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2016, 7:51 am

DIN

கலிபோர்னியா: மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது பிரெஸ்னோ என்னும் நகரம். இந்நகரைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் தன்னுடைய மகளை சிறு வயதில் இருந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 2009-ம் ஆண்டு மே முதல் 2013-ம் ஆண்டு மே வரை 4 ஆண்டுகளாக இந்த கொடூரம் நிகழ்ந்து வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 23 வயது ஆன நிலையில், அவர் காவல்துறையில் போலீசில் புகார் செய்து உள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவளது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

அவரை கடந்த மாதம் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் நேற்று தண்டனை விபரத்தை அறிவித்தது.அதன்படி குற்றவாளிக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  தனது தீப்பில் இந்த குற்றவாளி சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்,” என்று நீதிபதி தெரிவித்து உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.