அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
லாவோஸின் தகலைநகர் வியன்டைனில் 14-ஆவது இந்திய ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 11-ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி லாவோஸ் சென்றுள்ளார்.
இன்று காலை அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். இவர்களிருவரின் சந்திப்பு பற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தன்னுடைய டிவிட்டரில், 'இரண்டு ஜனநாயக நாடுகள் மற்றும் ஒரு முக்கியமான கூட்டுறவு; மோடி,ஒபாமா சந்திப்பு' என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் கடைசியாக பிரதமர் மோடி இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற பொழுது சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஏசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பிரதமர் மோடி உரையாற்றினார்.