மொகாதிசு: ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் ஹோட்டலொன்றுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் அங்கே பயணக்கைதிகளை பிடித்து வைத்துள்ள சம்பவம் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் 'டயா' என்னும் புகழ்பெற்ற ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது.அங்கே இன்று காலை அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் நுழைவாயிலில் கார் குண்டு ஒற்றை வெடிக்கச் செய்து உள்ளே நுழைந்தனர். பின்னர் உள்ளே இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர் என்று சோமாலியாவின் எல்ப் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளின் ஆதரவு வானொலியான 'அண்டலஸ் ரேடியோ' வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சம்பவத்தில் அதிகமான பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் அதிகாரப்பூர்வமாக பலி எண்ணிக்கை தெரியவில்லை.
அங்கே இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கி சுடும் ஓசை கேட்பதாகவும், அந்த பிரதேசத்தை கரும்புகை சூழ்ந்திருப்பதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன. உள்ளே சிக்கியுள்ள பிணைக்கைதிகளின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
அல் கொய்தாவின் சோமாலிய பிரிவான அல்-ஷபாப் என்னும் தீவிரவாத இயக்கம் இந்த செயலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.