வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. அதில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதுகுறித்து வங்கதேசத்தை சேர்ந்த பிடிநியூஸ்.24 வலைதளம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி நிலவரப்படி, அவாமி லீக் 119 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான "ஜாதிய கட்சி' 18 இடங்களை கைப்பற்றியிருந்தது. சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.