முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகும் ‘புன்னகை முகத்துடன்’ காணப்பட்ட பெளத்த துறவி!

பாங்காங்கின் தலைநகரான தாய்லாந்தின் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஆண்டு

News image
Updated On :23 ஜனவரி 2018, 12:58 pm IST

பாங்காங்கின் தலைநகரான தாய்லாந்தின் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைப் பெற்று வந்த, பெளத்த துறவி லூங் பொர் பியான், தனது 92-வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக 16-ம் தேதி இயற்கை எய்தினார்.

Story image

கம்போடியாவைச் சேர்ந்த துறவி பியான், மத்திய தாய் மாகாணமான லோப்புரியில் பெளத்த குருவாக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை துறவறத்திலும் சேவையிலும் கழித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அனைவரின் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்தார். உடல் நலிவுற்று இயற்கை எய்திய பின் அவரது உடல் லோப்புரியிலுள்ள புத்த மடாலாயத்திற்கு அனுப்பப்பட்டது.

Story image

அவர் சேவையாற்றிய அந்த மடாலயத்திலியேயே அவரது உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது சீடர்கள் அண்மையில் சவப்பெட்டியில் இருந்து உடலை அகற்றிய போது, அவரது உடல் எவ்வித அழிவுக்கும் சிதைவுக்கும் உட்படாத நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆச்சரியமான விஷயமாக துறவி பியான் இறந்து பல வாரங்கள் கடந்த நிலையிலும் அதே புன்னகையுடன் தோன்றினார். ஆச்சரியம் மிகுந்த இந்த நம்ப முடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து, சமூக ஊடகங்களுக்கு பகிர்ந்தனர் அவரது சிஷ்யர்களான துறவிகள்.

Story image

புதிய, சுத்தமான சவப்பெட்டிக்கு மாற்றுவதற்காக  மற்றத் துறவிகள் மூத்த துறவியின் உடலை அகற்றவே அதனை திறந்திருக்கிறார்கள். அப்போது பழைய சவப்பெட்டியில் காணப்பட்ட அவரது உடல் 36 மணி நேரத்திற்கு முன்பு இறந்த ஒருவரின் உடல் போலத்தான் இருந்திருக்கிறது. 

Story image

பியானின் அமைதியான புன்னகையுடன் கூடிய முகத்தைப் பார்த்ததும் அவர் பெளத்த மதத்தில் போதிக்கப்படும் நிர்வாண நிலையை அடைந்து விட்டதன் அடையாளம் அது என வியந்தனர் சீடர்கள். அவரது இறப்பின் 100-வது நாளில் இறுதி அஞ்சலி விழா நடைபெறும்வரை, துறவியின் சீடர்கள் அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.