கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நேரத்தை வீணடிக்காமல் வாக்களியுங்கள்: ஷேபாஸ் ஷெரீஃப்

நேரத்தை வீணடிக்காமல் வாக்களித்து பாகிஸ்தானின் ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஜூலை 2018, 10:01 am

ANI

நேரத்தை வீணடிக்காமல் வாக்களித்து பாகிஸ்தானின் ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் வாக்களித்த பின்னர் பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

யாரும் தயவு செய்து நேரத்தை வீணடிக்காமல் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேறி வாக்களிக்க வாருங்கள். மக்களின் சக்தியுடன் இந்நாட்டை நிச்சயம் நாங்கள் தலைசிறந்ததாக மாற்றுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கல்வி அளிப்போம், வறுமையை ஒழிப்போம், அனைவருக்கும் வீடு வசதியை ஏற்படுத்துவோம், அணைகளை உருவாக்குவோம். நமக்கு உதவ சீனா மற்றும் அரபு நாடுகள் தயாராக இருக்கின்றன என்றார்.

நவாஸ் கைது நடவடிக்கையை அடுத்து அக்கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டு தற்போது பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் சமீபத்தில் பனாமா ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ், பாகிஸ்தானின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக தனது கட்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மொத்தமுள்ள 272 இடங்களுக்காக 12,570 பேர் போட்டியிடுகின்றனர். சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 17 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.