ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 25 பேர் பலி! 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமையன்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 25 பேர் பலி! 
Published on
Updated on
1 min read

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமையன்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காபூல் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் அருகே புதன்கிழமை அன்று ஆப்கான் புத்தாண்டை கொண்டாடும் நிகழ்ச்சியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்பொழுது ஏதிர்பாரதவிதமாக அங்கே கார் குண்டு வெடித்தது. இதில் 25 பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் காயமடைந்தனர். 

இது ஒரு தற்கொலைப்படைத் தாக்குதலாக கருதப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com