கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து; 14 பேர் பலி
கஜகஸ்தானில் இருந்து 100 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
கஜகஸ்தான் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 'தி போக்கர் 100' என்ற விமானம் 100 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் அருகில் இருந்த இரண்டு மாடி அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்த மீட்புப் படையினர் மற்றும் விமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.