நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலி 

நைஜீரியாவில் ஞாயிறன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில், 30 பேர் பலியாகினர். 

News image
Updated On :17 ஜூன் 2019, 12:49 pm

DIN

அபுஜா: நைஜீரியாவில் ஞாயிறன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில், 30 பேர் பலியாகினர். 

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள கொண்டுகா பகுதியில் ஞாயிறன்று கால்பந்து போட்டி ஒன்றை ரசிகர்கள் சிலர் ஒன்றுகூடி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்குள் திடீரென்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நால்வர், தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு நைஜீரியாவின் போக்கோ ஹராம் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகள் நால்வரில் ஒருவர் பெண் ஆவார். அவர் கொண்டுவந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை என்பதால், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.