நியூஸிலாந்து தாக்குதலில் ஈடுபட்டவர் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

நியூஸிலாந்தில் நடைபெற்ற மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக அமைந்துவிட்டது.
நியூஸிலாந்து தாக்குதலில் ஈடுபட்டவர் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
Updated on
1 min read

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் மார்ச் 15-ஆம் தேதி பிரென்டன் ஹாரிஸன் டாரன் என்பவர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர், இவர்களில் 5 பேர் இந்தியர்கள். 

இது நியூஸிலாந்தில் நடைபெற்ற மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக அமைந்துவிட்டது. இதையடுத்து ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி துப்பாகி வகைகளை தனிநபர் பயன்படுத்த தடை விதித்து நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவைச் சேரந்த பிரென்டன் ஹாரிஸன் டாரன் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் நியூஸாலந்து காவல்துறையால் செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com