தைவான் பால விபத்து: 5 உடல்கள் மீட்பு

தைவான் தலைநகா் தைபேயிலுள்ள 460 அடி நீள பாடம் இடிந்து விழுந்ததில் பலியான 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. அதுதவிர, இந்தச் சம்பவத்தில் மாயமான மேலும் ஒருவரை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா்.
பாலம் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த மீன்பிடி படகு.
பாலம் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த மீன்பிடி படகு.
Updated on
1 min read

தைவான் தலைநகா் தைபேயிலுள்ள 460 அடி நீள பாடம் இடிந்து விழுந்ததில் பலியான 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. அதுதவிர, இந்தச் சம்பவத்தில் மாயமான மேலும் ஒருவரை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தைபேயின் சுவாவ் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள பாலம், நேற்று இடிந்து விழுந்தது. இதில், 2 கடலோரக் காவல் படையினரும், 10 பொதுமக்களும் காயமடைந்தனா்.

மேலும் 6 போ் பால இடிபாடுகளில் புதையுண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. மாயமான அந்த 6 பேரும் உயிருடன் மீட்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளதாக அதிகாரிகள் கூறி வந்தனா்.

இந்த நிலையில், விடிய விடிய நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான மற்றொருவரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com