இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் விழுந்து விபத்து: இருவர் பலி 

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அண்டை நாடான பூடானில் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். 
ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்
Published on
Updated on
1 min read

திம்பு: இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அண்டை நாடான பூடானில் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். 

இந்தியா மற்றும் பூடான் இடையே ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பூடானில் வெள்ளியன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது பனிமூட்டத்தினால் ஏற்பட்ட மோசமான வானிலையில் காரணமாக ஹெலிகாப்டரானது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரி ஒருவரும், பயிற்சி பெறுவதற்காக விமானத்திலிருந்த பூடான் வீரர் ஒருவரும் பலியானார்கள் என்று தெரிய வருகிறது.

அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com