வெனிசூலாவில் சிறைக் கலவரம்: 29 கைதிகள் பலி

வெனிசூலா சிறையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
Updated on
1 min read

வெனிசூலா சிறையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
போர்ச்சுகீஸா மாகாணம், அகரிகுவா நகரிலுள்ள காவல் நிலைய சிறைச்சாலையில் கைதிகள் வெள்ளிக்கிழமை திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக வந்த போலீஸார் மீது கைதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்; இதில் 19 போலீஸார் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 29 கைதிகள் உயிரிழந்தனர். 
வெனிசூலா சிறைகளில் கொள்ளளவைவிட பல மடங்கு கைதிகள் அடைத்து வைக்கப்படுவதும், போதிய அடிப்படை வசதிகள் அளிக்கப்படாததும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com