பிரிட்டன் முழுவதும், ஐரோப்பாவின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் அதன் மற்றொரு சார்பு நிறுவனமான இன்ஸ்டாகிராம் ஆகியன சனிக்கிழமை திடீரென முடங்கியது.
அதில் எவ்விதப் பதிவையும் பதிவிட முடியவில்லை என அதன் பயன்பாட்டாளர்கள் மற்றொரு சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சிறிது நேர இடைவேளைக்குப் பின்னர் அப்பகுதிகளில் முகநூலும், இன்ஸ்டாகிராமும் மீண்டும் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின.
இதனிடையே இரு செயலிகளின் இந்த திடீர் முடக்கம் தொடர்பாக முகநூல் நிறுவனம் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இச்சம்பவம் ஏதேனும் ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாக முடங்கிய பகுதிகளைச் சேர்ந்த பயன்பாட்டாளர்கள் மத்தியில் கருத்து பரவியுள்ளது.