பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பக்துன்குவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் ஜர்காரி பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறி வைத்து அûடயாளம் தெரியாத நபர் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், வாகனத்தில் இருந்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திúலயே உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழைய பகை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சந்úதகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.