இந்தோனேசியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் மலுக்குத் தீவுகள் பகுதியில் அமைந்துள்ள அம்போன் நகர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.