ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,497 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ரஷியாவில் ஒரே நாளில் அதிக பாதிப்பு எண்ணிக்கை இதுவே ஆகும். இதுவரை கரோனாவால் அங்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவில் பெரும்பாலாக மாஸ்கோவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளன. கடந்த மார்ச் 30 முதல், மாஸ்கோவில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 7497
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 58
குணமடைந்தோர் எண்ணிக்கை: 494