
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட கொரியாவின் தந்தை எனக் கருதப்படுபவரும், அதிபர் கிம் ஜோங்-உன்னின் தாத்தாவுமான கிம் இல் சங்-ன் பிறந்தநாள் விழா கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிபர் கிம் ஜோங்-உன் கலந்துகொள்ளவில்லை. அதிபரகாக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்த விழாவில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்திருக்கிறார்.
இதையடுத்து அவர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கிம் ஜோங்-உன்னிற்கு இருதய அறுவை சிகிச்சை அண்மையில் நடைபெற்றதாகவும் அதன் பிறகு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இதுதொடர்பாக அந்நாட்டில் இருந்து எந்த செய்தியும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.