வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட கொரியாவின் தந்தை எனக் கருதப்படுபவரும், அதிபர் கிம் ஜோங்-உன்னின் தாத்தாவுமான கிம் இல் சங்-ன் பிறந்தநாள் விழா கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிபர் கிம் ஜோங்-உன் கலந்துகொள்ளவில்லை. அதிபரகாக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்த விழாவில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்திருக்கிறார்.
இதையடுத்து அவர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கிம் ஜோங்-உன்னிற்கு இருதய அறுவை சிகிச்சை அண்மையில் நடைபெற்றதாகவும் அதன் பிறகு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இதுதொடர்பாக அந்நாட்டில் இருந்து எந்த செய்தியும் வெளியாகவில்லை.