ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 378 பேர் பலி

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 378 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) தெரிவித்தது.
ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 378 பேர் பலி
Updated on
1 min read


ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 378 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) தெரிவித்தது.

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் உள்ளது. அங்கு நாளுக்குநாள் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 378 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 4 வாரங்களில் நேற்று மிகவும் குறைவான பலி எண்ணிக்கை பதிவான நிலையில், இன்று இந்த எண்ணிக்கை லேசான உயர்வைச் சந்தித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஸ்பெயினில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 22,902 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com