பிரேசிலில் ஒரேநாளில் 60,091 பேருக்கு தொற்று; 1,261 பேர் பலி

பிரேசிலில் புதிதாக 60,091 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 32,24,876 ஆக அதிகரித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பிரேசிலில் புதிதாக 60,091 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 32,24,876 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பிரேசிலில் புதிதாக 60,091 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 32,24,876 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,261 பேர் பலியானதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 1,05,463 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 23,56,640 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com