புளோரிடா மாகாணத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை வெளியிட அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகில் கொடிய மற்றும் ஆபத்தை விளைவிக்கும் உயிராக கொசு பார்க்கப்படுகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொசுக்கடியால் ஏற்படும் நோய்களினால் இறக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் மலேரியாவைக் கட்டுப்படுத்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் பெண் கொசுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் புளோரிடா மாகாணம் முழுவதும் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை விடுவிக்க அமெரிக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை பரப்புகின்றன. மலேரியா, சிக்கன் குனியா, ஜிகா வைரஸ் போன்ற கொசுக்கடியால் ஏற்படும் நோய்களைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு மாற்றாக இந்த முறை சாத்தியமாக உள்ளதா என அறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு செவ்வாயன்று அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இறுதி ஒப்புதல் கிடைத்த பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 கோடிக்கும் அதிகமான மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் புளோரிடா வெளியிடப்படும்.
மே மாதத்தில், அமெரிக்க சுற்றுச்சூழல் நிறுவனம் பிரிட்டனில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸிடெக் நிறுவனத்திற்கு மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஆண் ஈடிஸ் ஈஜிப்டி கொசுக்களை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. அவை OX5034 என அழைக்கப்படுகின்றன. "இந்தக் குறிப்பிட்ட கொசுக்கள் ஆண்களாகும். அவை ஒரு புரதத்தை எடுத்துச் செல்ல மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவை பெண் கொசுக்களுடன் இணைந்திருக்கும்போது பெண் சந்ததியினரின் உயிர்வாழ்வைத் தடுக்கும், "என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரல் அழைப்பு தரத்தை மதிப்பிட மேம்பட்ட ‘மைகால்’ செயலி: ட்ராய் அறிமுகம்

தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்பு

நேபாளம்: மதக் கலவரத்தால் பாதித்த மாவட்டங்களில் திரும்பிய இயல்புநிலை

உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



