அறவழியில் போராடுவது விவசாயிகளின் அடிப்படை உரிமை: ஐ.நா. பொதுச் செயலா்

‘இந்திய விவசாயிகளுக்கு அறவழியில் போராடும் அடிப்படை உரிமை இருக்கிறது’ என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபான் துஜாரிக் கூறியுள்ளாா்.
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்
Published on
Updated on
1 min read

நியூயாா்க்: ‘இந்திய விவசாயிகளுக்கு அறவழியில் போராடும் அடிப்படை உரிமை இருக்கிறது’ என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபான் துஜாரிக் கூறியுள்ளாா்.

ஐ.நா.வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, அவரிடம் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்து துஜாரிக் கூறியதாவது:

இந்தியாவின் விவசாயிகள் போராட்டத்தைப் பொருத்தவரை, பிற நாடுகளில் அதே போன்ற சூழல் ஏற்படும்போது அந்த நாடுகளிடம் என்ன வலியுறுத்தி வருகிறோமோ அதையேத்தான் இந்தியாவிடமும் வலியுறுத்துவோம்.

அறவழியில் போராடுவதற்கு அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளது. எனவே, போராடும் விவசாயிகளை அதிகாரிகள் தடுக்கக் கூடாது என்றாா் அவா்.

ஏற்கெனவே, விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் உண்மை நிலைமை புரியாமல் சா்வதேசத் தலைவா்கள் கருத்து தெரிவிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவஸ்தவா குற்றம் சாட்டியிருந்தாா்.

அறவழிப் போராட்டம் அடிப்படை உரிமை என்பதால், இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவா்கள் கூறியிருந்தனா்.

இந்த நிலையில், ஐ.நா. பொதுச் செயலரின் செய்தித் தொடா்பாளரும் அதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com