அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உக்ரைனில் ஆயுதம் தாங்கிய நபரிடம் சிக்கிய 20 பிணைக் கைதிகள்

உக்ரைனின் வடமேற்குப் பகுதியில், பேருந்து ஒன்றை வழிமறித்த ஆயுதம் தாங்கிய நபர், அதில் இருந்த 20-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.

News image
உக்ரைனில் ஆயுதம் தாங்கிய நபரிடம் சிக்கிய 20 பிணைக் கைதிகள்
Updated On :21 ஜூலை 2020, 9:29 am

PTI


கைய்வ்: உக்ரைனின் வடமேற்குப் பகுதியில், பேருந்து ஒன்றை வழிமறித்த ஆயுதம் தாங்கிய நபர், அதில் இருந்த 20-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், மத்திய லட்ஸ்க் பகுதியை சுற்றிவளைத்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கும் நபர் கையில் ஆயுதத்தை வைத்திருப்பதாகவும், உடலில் வெடிபொருளைக் கட்டியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினர் முயன்று வருகிறார்கள். அவரை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், அவரது முகநூல் பக்கத்தில் உக்ரைன் நாட்டின் நடைமுறைகளுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டிருந்ததன் மூலம் மன அழுத்தத்தில் இருந்ததை அறிந்து கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், பேருந்து சேதமடைந்திருப்பதாகவும் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.