ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகத்தின் கட்டுமானத் திட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், ஹாய்நான்
ஹைனான் மாநிலத் தலைநகர் ஹைக்கோவ் நகரக் காட்சி
ஹைனான் மாநிலத் தலைநகர் ஹைக்கோவ் நகரக் காட்சி
Published on
Updated on
1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகக் கட்டுமானம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ஹாய்நான் மாநிலத்தில் தாராள வர்த்தகத் துறைமுகத்தை உருவாக்குவது, புதிய காலத்தில் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்கு முக்கியமானது ஆகும். நடுவண் அரசும்,  தொடர்புடைய வாரியங்களும் நெடுநோக்கு பார்வையில் ஹாய்நான் மாநிலத்தில் சீர்திருத்தத்தையும் புத்தாகத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டுக்குள், இத்துறைமுகத்தில் தாராள வர்த்தகம் மற்றும் தாராள முதலீடு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட அமைப்புமுறை உருவாக்கப்படும். தொடர்ந்து, 2035ஆம் ஆண்டளவில் இது சிறப்பு மிக்கத் திறப்பு ரக பொருளாதாரத் துறைமுகமாக மாறும். இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், இத்துறைமுகம், சர்வதேச செல்வாக்குடன் கூடிய உயர் தர தாராளர வர்த்தக துறைமுகமாகப் பன்முகங்களிலும் உருவெடுக்கும்.  

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com