தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ‘திடீர் ’உத்தரவு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image

சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங்

Updated On :23 ஜூன் 2020, 11:07 am

IANS

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங்கின் பரிந்துரையின்படி அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து செவ்வாயன்று அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்காரணமாக விரைவில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான தேதி ஜூன் 30-ஆக இருக்கலாம் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ‘தி ஸ்ட்ரைட் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.    

முன்னதாக தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் லீ ஸீன் லூங் கூறியதாவது:

சிங்கப்பூரில் கரோனா வைரசின் தாக்கத்தினால் ஏற்பட்ட சூழல் தற்போது கட்டுக்குள் இருப்பதால், பொதுத்தேர்தலை நடத்தி விடலாம் என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய அரசுக்கு ஆட்சி செய்வதற்கு முழுதாக ஐந்து ஆண்டுகள் கிடைக்கும்.

புதிதாகத் தேர்வு செய்யபப்டும் அரசானது கரோனா பாதிப்பைக் கையாளுதல்,  நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேசிய செயல் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதுதொடர்பாக முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருக்கும்.

வரும் அரசானது  வெறுமனே அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தொலைநோக்குப் பார்வையுடன் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.