கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுமாா் 85 கோடி மாணவா்கள் வகுப்புகளைத் தவறவிட்டுள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரோனா வைரஸ் காரணமாக 102 நாடுகளில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன; 11 நாடுகளில் சில வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலக மாணவா்களின் கல்விக்கு கரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.