முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வரும் சீனா

சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின்

News image
Updated On :27 மே 2020, 6:39 pm IST

சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2020ஆம் ஆண்டுக் கூட்டத் தொடர்களில், கொவைட்-19 நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகிய அம்சங்களில் மிக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத் தொடரின் விவாதக் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆலோசனை வழங்கி பேசுகையில்

மக்களை முதன்மை இடத்தில் வைக்கும் வளர்ச்சிக் கொள்கையை பல்வகை வகைகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். நெருக்கமாக மக்களைச் சார்ந்திருந்து, இடைவிடமால் மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொவைட்-19 தொற்று நோய் ஏற்பட்ட பிறகு மக்களின் உடல் நலம் மற்றும் உயிர் பாதுகாப்பை முதலிடத்தில் வைத்து முழு மூச்சுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உயிரை மீட்பது என்பது மக்களே முதன்மை என்ற கொள்கையைச் செயல்படுத்துவதாகும்.

தொற்று நோய் தடுப்பைத் தவிர,  பொருளாதார வளர்ச்சியிலும் இந்த கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாண்டுக்குள், வறுமை ஒழிப்பு மற்றும் குறிப்பிட்ட வசதியான சமூக உருவாக்கம் ஆகிய இரண்டு இலக்குகளை நிறைவேற்ற சீனா திட்டமிட்டுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கையில் சீன அரசுத் தலைவர் மிகுந்த கவனம் செலுத்துகின்றார். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடரின் பொருளாதாரத் துறைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் ஷிச்சின்பிங் பேசுகையில்,  மக்கள் குறிப்பாக விவசாயிகளுக்கு உதவி அளிப்பது எமது குறிக்கோள் ஆகும் என்று குறிப்பிட்டார்.

பொருளாதாரச் சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் வகையில், அதன் இறுதி நோக்கம்,  மக்கள் அருமையான வாழ்க்கையை வாழ்வதவதாகும். தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்திலும் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை நனவாக்குவதிலும், இந்த குறிக்கோள் தெளிவாக தெரிந்துள்ளது. 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சொல்வதைப் போல,  கட்சியின் தலைமையில் மக்களுடன் இணைந்து மேற்கொண்டு வரும் ஆக்கப்பணிகள் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை,  மக்கள் நல்ல வாழ்க்கையை வாழ்வதாக அமையும்.  எவ்வளவு அறைகூவல் மற்றும் அழுத்தத்தை எதிர்கொண்டாலும், இந்த இலக்கு எப்போதும் மாறப் போவதில்லை.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.