வியன்னாவில் தீவிரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வியன்னாவில் தீவிரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
வியன்னாவில் தீவிரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
Updated on
1 min read

புது தில்லி: வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களால், அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், ஆஸ்திரியாவுக்கு இந்தியா துணை நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்" என பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.

6 வெவ்வேறு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள், உணவகங்களைக் குறி வைத்து நடத்திய தாக்குதலில் ஒரு தீவிரவாதி உள்பட 4 பேர் பலியாகினர்.

கரோனா காரணமாக ஒரு மாத காலத்துக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள் இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com