சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ராகுல் பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர்: பராக் ஒபாமா

பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 

News image
Updated On :13 நவம்பர் 2020, 5:59 am

DIN


நியுயார்க்: பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 

பராக் ஒபாமா "எ பிராமிஸ்ட் லாண்ட்" என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார். அதில், உலக உளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த நூல் குறித்து தி நியூயார்க் டைம்ஸ் விமரிசனம் எழுதியுள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:   "பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர், மாணவரைப் போல பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட விஷயத்தில் ஆழ்ந்த அறிவு பெறுவதற்கான ஆர்வமோ அல்லது தகுதியோ இல்லாதவராக உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து குறிப்பிடுகையில்,  அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் இருவரிடமும் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்" எனத் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தியின் தாயும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி குறித்து குறிப்பிடுகையில், எங்களிடம் சார்லி கிறிஸ்ட் மற்றும் ரஹ் இமானுவேல் போன்ற ஆண்களின் அழகு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது,  ஆனால், சோனியா காந்தியைப் போல, ஒன்று அல்லது இரு சம்பவங்கள் தவிர்த்து பெண்களின் அழகு குறித்துச் சொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "உடல்ரீதியாக அவர் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை" எனத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபராக தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் பற்றி குறிப்பிடுகையில், மிகவும் ஒழுக்கமான, நேர்மையான, விசுவாசமான மனிதர் எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது  2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.  2010 ஆண்டு ஒபாமா அவரது மனைவியுடன் இந்தியா வந்திருந்தபோது அப்போதைய பிரதமர் மனமோகன்சிங், அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகிய இருவருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.