

பராகுவே நாட்டின் வனபப்குதியில் எரிந்துவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் அந்நாட்டில் அவசரநிலையை அறிவித்து பராகுவே அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பராகுவே நாட்டின் சாக்கோ வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை அணைக்க அந்நாட்டு அரசு போராடி வருகிறது. அதிகரித்து வரும் காட்டுத்தீயானது காடுகளின் பரந்த பரப்பை நாசமாக்கியுள்ளது.
தீயை அணைக்க தீயணைப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் வறண்ட வானிலை காரணமாக தீப்பரவல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பராகுவே அரசு வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்தது. இதன்மூலம் தீயை அணைக்க பன்னாட்டு உதவியை பராகுவே கோரியுள்ளது.
மொத்தம் 5231 இடங்களில் ஏற்பட்டுள்ள தீயால் அப்பகுதி புகைமூட்டத்துடன் காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.