“இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும்”: ராஜபக்சே வலியுறுத்தல்

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என இலங்கை பிரதமர் மகிந்தராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பிரதமர் ராஜபக்சே
இலங்கை பிரதமர் ராஜபக்சே
Updated on
1 min read

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என இலங்கை பிரதமர் மகிந்தராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் புதன்கிழமை விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். 

தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர்,  “இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  “விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடரும் என்று நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com